News April 14, 2025

சரும பிரச்சனைகள் தீர்வு சொல்லும் புன்னைநல்லூர் மாரியம்மன்

image

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் தேடும் பக்தர்களால் பிரசித்தி பெற்றது. அம்மை, சிக்குன் குனியா, தோல் புண் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டி இங்கு வருகிறார்கள். பக்தர்கள் இங்கு வந்து அனைத்து விதமான நோய்களிலிருந்தும் குணமடைய ஒரு வாரம் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். சரும பிரச்சனைகளை தீர்வு கூறும் நம் புன்னைநல்லூர் மாரியம்மன்.உங்க ப்ரெண்ட்ஸ்க்கு #SHARE பண்ணுங்க

Similar News

News April 16, 2025

தஞ்சை: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள ( Training Centre Manager) 90 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 16, 2025

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் தொடக்கம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில், 150 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் தற்போது மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளனர்.

News April 16, 2025

தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

image

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!