News September 14, 2025
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

செம்பனார்கோயில், ஆறுபாதி விளநகரை சேர்ந்த அன்பரசன் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கவுடு என்ற செல்வகுமார் (26) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைத்தனர்
Similar News
News September 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீஸார் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, ஆணைக்காரன் சத்திரம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News September 13, 2025
மயிலாடுதுறை: ஆயில் நிறுவனத்தில் வேலை!

மயிலாடுதுறை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 13, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கிய கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்தஅவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.