News April 7, 2025
சரக்கு லாரி மோதி ஊழியர் பலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதியதில், நிதி நிறுவன ஊழியர் ராஜா பலியானார். இந்த தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
Similar News
News April 9, 2025
பிஜேபி சேலம் மாநாட்டுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழக பாஜக மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் 19ஆம் தேதி ஓமலூரில் நடைபெறவிருக்கும் சேலம் பெருங்கோட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு தர்மபுரி மாவட்ட மற்றும் மண்டல அளவில் பொறுப்பாளர்களை இன்று தர்மபுரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சரவணன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News April 9, 2025
தர்மபுரி தொங்கும் தூண் பற்றி தெரியுமா?

தர்மபுரியில் மிகவும் பிரிசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் காணப்படும், தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால் மறுப்பக்கம் வந்துவிடும். 2000 கிலோ எடை கொண்ட இந்த தூண் அந்தரத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொங்கும் தூண் என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு சோறு பதம் ஆகும். *இது பற்றி தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்*
News April 9, 2025
தர்மபுரியில் காசாளர் பணிக்கு வேலைவாய்ப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி லீடிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காசாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு. இந்த வேலைக்கு 20-30 வயதுக்குட்பட்டவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <