News November 17, 2024
சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கிய போலீஸ்

வெளிநாட்டில் இருக்கும் சம்போ செந்திலின் இருப்பிடத்தை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் சம்போ செந்தில். சம்போ செந்திலை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவோம் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2ஆவது எதிரியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட உள்ளார்.
Similar News
News April 3, 2026
சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
News April 3, 2026
BREAKING – வேளச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேளச்சேரி தொகுதியில் அசன் மௌலானா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
News April 3, 2026
சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


