News November 17, 2024
சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கிய போலீஸ்

வெளிநாட்டில் இருக்கும் சம்போ செந்திலின் இருப்பிடத்தை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் சம்போ செந்தில். சம்போ செந்திலை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவோம் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2ஆவது எதிரியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட உள்ளார்.
Similar News
News September 10, 2025
BREAKING: அடையாறு பகுதியில் ED சோதனை

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)
News September 10, 2025
சென்னை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.