News April 21, 2024
சமையல் செய்த போது தீப்பிடித்து மூதாட்டி பலி

வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (72). இவர் கடந்த 10ம் தேதி சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது இதில் காயமடைந்த ருக்மணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி நேற்றிரவு (ஏப்ரல் 20) இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
வேலூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

வேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 21 ) மின்பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர் டவுன், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், விருதம்பட்டு, செங்காநத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்
News August 20, 2025
வேலூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (2/2)

இத்திட்டத்தின் மூலம் 60% சிறுபான்மையினர் மற்றும் 40% இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
▶️ வருமானச் சான்றிதழ்
▶️ சாதிச் சான்றிதழ்
▶️ பள்ளி மாற்றுச் சான்றிதழ்
▶️ இருப்பிடச் சான்றிதழ்
▶️ குடும்ப அட்டை
▶️ ஆதார் அட்டை
▶️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க..
News August 20, 2025
வேலூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (1/2)

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் தொடங்க சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், தனிநபர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இடங்களில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். ஷேர் பண்ணுங்க. <<17460213>>தொடர்ச்சி<<>>