News March 31, 2025
சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இயங்குகின்றன

ஆயில் நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை கண்டித்து சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் கடந்த 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தூத்துக்குடியில் ஏராளமான டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இன்று டேங்கர் லாரிகள் வழக்கம் போல் இயங்கின.
Similar News
News February 13, 2026
தூத்துக்குடியில் பெண் தற்கொலை

தூத்துக்குடி, முத்தையாபுரத்தை சேர்ந்த முத்து இசக்கி – மணி தம்பதியினர் அப்பகுதியில் உப்பளத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்து வந்தனர். இதில் விரக்தியில் இருந்த மனைவி முத்து இசக்கி திடீரென தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


