News March 28, 2024
சமூக வலைத்தளங்களில் அவதூறாக பிரச்சாரம்

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் கௌதமன் என்பவருக்கு சொந்தமான தனியார் ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட பிரியாணியின் அளவு குறைவாக உள்ளதாக கூறி சண்டைபோட்டு, சமூக வலை தளங்களில் ஓட்டல் வாசலில் பிரியாணியை கொட்டி எடுத்த வீடியோவை அவதூறாக பரப்பி பிரச்சாரம் செய்த தினேஷ், சூர்யாதி , திருமுருகன் மீது ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
புதுவை: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
புதுச்சேரி: வேரோடு சாய்ந்த 20 மரங்கள்

புதுச்சேரி, ஏனாமில் மோன்தா புயலால் நேற்று (அக்.28) காலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 20 மரங்கள் வேரோடு சாய்தன. இதனால் ஏனாம் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் ஏனாமில் நேற்று காலை வரை மோன்தா புயலால் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
News October 29, 2025
புதுவை: வாக்காளர் திருத்தப்பணி அறிவிப்பு

“புதுவையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி வரும் 4-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.” என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.


