News July 10, 2025
சமூக நல்லிணக்க விருது; ஆட்சியர் அறிவிப்பு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்தவும் கௌரவ படுத்துவதற்கும் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.1 கோடி வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை பெற தகுதியான புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்புத்துள்ளார்.
Similar News
News July 10, 2025
புதுக்கோட்டை : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
கணவர் மடியில் உயிரிழந்த மனைவி

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் தெய்வானை தம்பதியினர் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து விட்டு நடந்து செல்லும் பாதையில் அமர்ந்திருந்த பொழுது உடற்சோர்வு காரணமாக கணவர் மடியில் தெய்வானை சாய்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென கணவர் மடியிலேயே தெய்வானை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News July 9, 2025
புதுக்கோட்டை: ரேஷன் குறைதீர்க்கும் முகாம்

புதுகை மாவட்டம் முழுவதும் ஜூலை12ஆம் தேதி அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.