News January 8, 2025

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

image

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி ரொக்கம் ரூ.1,21,20,970, தங்கம் 1 கிலோ 40 கிராம், வெள்ளி 6 கிலோ 625 கிராம், அயல்நாட்டு நோட்டுக்ள் 241, அயல்நாட்டு நாணயங்கள் 361 ஆகியன பெறப்பட்டு கோயில் கணக்கில் வர வைக்கப்பட்டன. இதில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 26, 2026

திருச்சி: சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு!

image

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில், பிரெயில் (BRAILLE) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடும் நிகழ்ச்சி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்றதில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அதனை வெளியிட்டார்.

News January 26, 2026

நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

image

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News January 26, 2026

திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்!

image

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!