News September 5, 2025
சபாநாயகர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி

கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் வ உ சிதம்பரனார் திருஉருவச் சிலைக்கு (5.9.2025) காலை 9 மணிக்கு அரசின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் ஆகியோர் மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் எம்பி, எம் எல் ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
Similar News
News September 5, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 5, 2025
பாஜகவில் நைனார் நாகேந்திரன் மகனுக்கு பொறுப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய நிர்வாகிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஆவார். இதுபோல் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் மாரியப்பனுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
நெல்லை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<