News November 16, 2025
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
Similar News
News November 16, 2025
BREAKING: விலை தாறுமாறாக மாறியது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹6 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி கிலோ ₹104-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால், தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை உயர்கிறது. அதேபோல், முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.95-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
News November 16, 2025
₹44,900 சம்பளம், இன்றே கடைசி: APPLY NOW!

புலனாய்வு துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 258 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மேலும் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 16, 2025
பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கும் திமுக: உதயநிதி

நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய ஒரே கட்சியாக திமுக திகழ்கிறது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படை கொள்கை, வலுவான கட்டமைப்பு ஆகிய 3 விஷயங்கள் இருந்தால் மட்டுமே மக்களால் ஏற்கப்பட்டு வளர்ச்சியை அடைய முடியும். மூன்றும் உள்ள திமுக 75 ஆண்டுகள் கடந்தும், வலுவான கொள்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


