News December 8, 2025

சபரிமலையில் 10 பேர் உயிரிழப்பு.. தொடரும் சோகம்

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். முதல் 10 நாள்களில், கோவை பக்தர் முரளி உள்பட 9 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இன்று கடலூர் பக்தர் சுந்தர்(66), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!

Similar News

News April 4, 2026

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மரணம்.. அடுத்த துயரம்

image

பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது.

News April 4, 2026

சட்டப்பேரவைத் தேர்தலில் மல்லுகட்டும் 3 எம்.பிக்கள்!

image

ஒருவழியாக அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் 3 முக்கிய தலைவர்கள் பேரவைத் தேர்தலிலும் களமிறங்குகின்றனர். அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக சார்பில் திருமாவளவன், மயிலம் தொகுதியில் அதிமுகவின் CV சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 4, 2026

தேமுதிகவை வீழ்த்துவோம்.. பசும்பொன் பாண்டியன் சபதம்

image

பல்வேறு மன வலிகளுடன் திமுக கூட்டணியை அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிப்பதாக பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேநேரம், RSS-ன் துணை அமைப்பான சந்தர்ப்பவாத சாதியவாத தேமுதிக, கொமதேக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிகளுக்கு ஆதரவில்லை என்றும், இந்த கட்சிகள் போட்டியிடும் 14 தொகுதிகளிலும் அவர்களை வீழ்த்துவோம் எனவும் அறிவித்துள்ளார். இது, தேர்தல் களத்தை அதிர வைத்திருக்கிறது.

error: Content is protected !!