News November 16, 2024

சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கார்த்திகை முதல் தேதி இன்று பிறந்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சென்னை-கொல்லம் சிறப்பு ரயில் வரும் 19ம் தேதிமுதல் 2025 ஜன.15ம் தேதி செவ்வாய் வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் வழியாக மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கொல்லம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

திருப்பூர்: விவசாயிக்கு கத்தி குத்து

image

நத்தக்காடையூர் அருகே மருதுறை அரண்மனைகாடு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (48) விவசாயி. இவருக்கும் காளிவலசு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (43) என்பவருக்கும் இடையே, நிலம் பிரச்சினையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாலமுருகன் ஆத்திரம் அடைந்து, சிவசாமியை கல்லால் தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 2, 2026

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை

image

திருப்பூரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் மனைவி சோபியா. கடந்த டிச.1-ம் தேதி திருமணமானவர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முந்தினம் சோபியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இச்சம்பவம் நடந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!