News March 29, 2025
சனி தோஷம் நீக்கும் வட திருநள்ளாறு

சென்னை பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வட திருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரர் பாவ விமோஷனம் பெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோயில் இருப்பதால் சனி பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் இங்கு சென்று வழிபடலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 4, 2026
சென்னை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

சென்னை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 4, 2026
சென்னை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

சென்னை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
தனியார் விடுதியில் பெணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை: போரூர் தனியார் தங்கும் விடுதியில், வரவேற்பாளர் பணிக்குச் சேர்ந்த வெளிமாநில பெண்ணிடம் விடுதியின் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று(பிப்.4) போலீசார், உரிமையாளரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெளிமாநில பெண் உடமைகள் அனைத்தும் உரிமையாளர் பறித்து கொண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.


