News April 5, 2025
சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2025
குழந்தை பாக்கியம் தரும் கந்தாஸ்ரமம் !

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் இயற்கை சூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளது கந்தாஸ்ரமம். இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கந்தனை வழிபட்டுச் செல்கின்றனர். முருகனும் அவ்ரது தாயார் பார்வதியும் எதிர் எதிர் சன்னதியில் இருப்பது இந்தக் கோயிலில் மட்டும் தான். இங்குள்ள முருகனை தரிசித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 5, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News April 5, 2025
சேலத்தில் நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மேற்கு வட்டம் மஜ்ரா கொல்லப்பட்டி, இரும்பாலை மெயின் ரோடு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.