News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

உப்புக்கு Expiry Date இருக்கா?

image

உப்பில்லாமல் உணவின் சுவை கெட்டுப்போகலாம், ஆனால் உப்பு எப்போதும் கெட்டுப்போகாது. சுத்தமான உப்பில் பாக்டீரியா மற்றும் கிருமிகளால் வளரவே முடியாது. அதில் இருக்கும் அயோடின் காலப்போக்கில் கரைந்துபோய், அதன் சத்து குறையுமே தவிர, மற்றப்படி உப்பு கெட்டுப்போகாது. எவ்வளவு நாள்களில் அந்த சத்து குறையும் என்பதை சுட்டிக்காட்டவே உப்பு பாக்கெட்டுகளில் Expiry Date கொடுக்கப்படுகிறது. பலருக்கும் தெரியாது SHARE THIS.

News February 1, 2026

பெரும் சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை

image

பட்ஜெட்டால் அதிர்ந்த பங்குச் சந்தைகள் பெரும் சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிந்து 80,722ஆகவும், நிஃப்டி 495 புள்ளிகள் சரிந்து 24,825ஆகவும் நிறைவடைந்தன. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள முதல் 30 பங்குகளில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, டைட்டன் தவிர மற்ற அனைத்தும் சரிவுடன் முடிந்தன. F&O தொடர்பான பத்திர பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டது, சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

News February 1, 2026

மத்திய பட்ஜெட்டை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

image

இந்தியாவின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என ராகுல் விமர்சித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலையில்லை, உற்பத்தி துறை சரிவடைந்துள்ளது, முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்ப பெறுகின்றனர், விவசாயிகள் தவிக்கின்றனர்; ஆனால் இவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உண்மையான பிரச்சினைகளைக் காணமறுக்கும் இந்த பட்ஜெட், தவறுகளைத் திருத்திக் கொள்ள முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!