News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2026

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. தேர்வு ஒத்திவைப்பு

image

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் 5 நாள்கள் விடுமுறையாகும்.

News April 6, 2026

கூட்டணி கட்சிகளுக்கு டிமிக்கி கொடுத்ததா அதிமுக?

image

பாமகவுக்கு அதிக பலம் உள்ள தொகுதிகளைதான் அதிமுக ஒதுக்கியுள்ளதாக கே.பாலு கூறினார். வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக எழும் விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற எந்தவொரு கட்சியாவது இதுபோன்று கூறியிருக்கிறதா என கேட்டார். மேலும், திமுகவில் தான் அப்படி நடந்துள்ளதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வருத்தப்படுவதாகவும் அவர் பேசினார்.

News April 6, 2026

சிவனின் எந்த மந்திரம் எப்போது கூறினால் முழு பலன்!

image

ஒரு மந்திரத்தை குறிப்பிட்ட நாள், நேரம், திதி, முறையில் சொல்லும் போது பலன் அதிகமாக கிடைக்கும் ✱‘ஓம் நம சிவாய’ பஞ்சாட்சர மந்திரத்தை பிரம்ம முகூர்த்தம்(காலை 4- 6 மணி வரை) உச்சரிப்பது நல்லது ✱மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் 11 முறை உச்சரிப்பது சக்தி வாய்ந்ததாகும் ✱ருத்ராஷ்டகம், சிவ தாண்டவம் மந்திரத்தை சிவராத்திரியன்று எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். வேண்டுதல்கள் நிறைவேறும்.

error: Content is protected !!