News June 17, 2024
சந்தன கட்டை பறிமுதல் வழங்கு சிபிஐக்கு மாற்றம் வேண்டும்

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுவை அமைச்சரின் மகளுகுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சந்தன கட்டை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு வனத்துறை நடவடிக்கை எடுத்த நிலையில் புதுவை அரசிடம் இருந்து பதில் இல்லை. இந்த வழக்கில் உண்மை தன்மையை கொண்டுவர வேண்டும் இந்த வழக்கை சிபிஜக்கு மாற்றம் செய்ய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.
Similar News
News March 30, 2026
புதுவை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

காரைக்கால், ராயன்பாளையம் பகுதியில் கோட்டுச்சேரி போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகப் படும்படியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 690 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் விசாரணையில் அவர் காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெரு ரகுராம் (29) என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News March 30, 2026
புதுவை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

காரைக்கால், ராயன்பாளையம் பகுதியில் கோட்டுச்சேரி போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகப் படும்படியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 690 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் விசாரணையில் அவர் காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெரு ரகுராம் (29) என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News March 30, 2026
புதுவையில் தொடங்கிய தபால் வாக்கு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40% க்கு மாற்றுத்திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்கள் வீட்டிலேயே சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு நூறு வயது கடந்த வாக்காளர்களை கவுரவப்படுத்தினார்கள்.


