News April 28, 2025

சத்துணவு மையத்தில் வேலை: கடைசி வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க நாளை (ஏப்.29) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

Similar News

News April 28, 2025

கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

image

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

News April 28, 2025

கடலூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில் 

image

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News April 28, 2025

லிப்ட் கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

image

விருதாச்சலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் லிப்ட் கொடுத்தனர். பாதி வழியில் இறங்கி இவரை தாக்கி பணம், செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

error: Content is protected !!