News April 29, 2025

சத்துணவு மையங்களில் வேலை: கடைசி வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 231 சமையல் உதவியாளர் பணிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்து <<>>தெரிந்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை (ஏப்.30) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..

Similar News

News November 2, 2025

திருச்சி: வீடு தேடி வருகிறது – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம், திருச்சி மாவட்டத்தில் வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமை பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

சிறுகமணியில் காளான் வளர்ப்பு கட்டணப் பயிற்சி

image

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு குறித்த கட்டணத்துடன் கூடிய சான்றிதழ் பயிற்சி நவ.6ம் தேதி காலை 9.30 – மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், பல்வேறு வகை காளான்களை கண்டறிதல், வளர்ப்பு, நிர்வாகம், காளான் வளர்ப்பு தொழில் முனைவோர்களின் அனுபவ உரை, சந்தை தகவல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

திருச்சி: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!