News August 16, 2024

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News August 5, 2025

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி உள்ளிட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

விருதுநகர் கூட்டுறவு வங்கியில் வேலை… JOB ALERT!

image

விருதுநகர் இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 5, 2025

விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

image

▶️ டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000

▶️ இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348

▶️ மரு.க.பிர்தெளஸ் பாத்திமா எம்.டி. (சித்தா) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008161

▶️ டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455

இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…

error: Content is protected !!