News April 10, 2025
சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கோயிலில் மாலை 4 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Similar News
News November 2, 2025
சிவகாசி கோட்டத்தில் மின்தடை அறிவிப்பு

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வருகின்ற செவ்வாய் கிழமை (04:11:2025 ) அனுப்பன்குளம், பேராபட்டி, சுந்தராஜபுரம், மீனம்பட்டி, நாராணபுரம், செல்லியநாயக்கன்பட்டி, சின்னகாமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
News November 2, 2025
விருதுநகரில் நாளை முதல் வீடு தேடி வரும்

விருதுநகரில் வயதான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை, நாளை மறுநாள்(நவ.3,4) இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைபதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயருகிறது – எம்.எல்.ஏ

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அசோகன், தமிழக அரசின் திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயருகிறது என தெரிவித்தார்.


