News March 24, 2025
சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.
Similar News
News December 29, 2025
மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

பேரையூர் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள்(75). தனித்து வசித்து வந்த இவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராமல் சேலையில் தீப்பற்றியது. இதில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
HCL ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையிலே பணி நியமனம்!

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <
News December 29, 2025
மதுரை: சாலையில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து பலி

மதுரை கோ.புதூர் 3வது தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகன்(44). பெயிண்டிங் வேலை பார்த்து வந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 3 வருடமாக வேலைக்கு செல்வதில்லை. அதிக குடிபோதையில் மாட்டுத்தாவணி எதிரே சர்வேயர் காலனியில் ரோட்டில் இன்று நடந்துசென்ற போது சாலையின் மையத் தடுப்பு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


