News August 4, 2025

சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரம் ஜே.பி., மித்ரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் ஆன நிலையில் சட்டவிரோதமாக இங்கு பட்டாசு தயாரிப்பு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு அறையில் பட்டாசுக்கான திரி தயாரிப்பது தெரிந்தது. போலீசாரை கண்டதும் இருவர் தப்பி சென்ற நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 5, 2025

விருதுநகர் கூட்டுறவு வங்கியில் வேலை… JOB ALERT!

image

விருதுநகர் இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 5, 2025

விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

image

▶️ டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000

▶️ இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348

▶️ மரு.க.பிர்தெளஸ் பாத்திமா எம்.டி. (சித்தா) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008161

▶️ டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455

இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…

News August 5, 2025

மூடிய ஆலையை திறந்து பட்டாசு தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை புல்லக்கவுண்டன்பட்டி வாகினி பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையை போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் விஜய கரிசல்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (30), கருப்பசாமி (26) ஆகியோர் குருவி வெடி தயாரித்து கொண்டிருந்தனர். பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!