News March 12, 2025

சட்டபேரவை முன்பு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்!

image

கோவில்பட்டியில் அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள கோர்ட் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நித்திரையில் இருக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து சட்டமன்றம் முன்பு மார்ச் 19ஆம் தேதி அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தப்போவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

தூத்துக்குடியில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0461-2335111 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.

News August 24, 2025

தூத்துக்குடியில் ஒரு சின்ன கோவா! உங்களுக்கு தெரியுமா?

image

தூத்துக்குடியில் T.சவேரியார்புரம் தான் “சின்ன கோவா” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கட்டிடக்கலை & வாழ்க்கை முறை பழமை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இங்குள்ள புனித சவேரியார் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு புனித சவேரியாரின் விரல் ஒன்று பாதுகாக்கப்படுகிறது. மீனவர்கள், கடல் தொழில் மற்றும் விவசாயம் சிறக்க, புனித சவேரியாரை வழிபடுகின்றனர். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE.

News August 24, 2025

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மதுரை எம்பி சிறப்புரை

image

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிகழ்வில் நேற்று முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் அய்கோ தமிழர் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!