News March 14, 2025

சட்டக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வக்கீல் கைது

image

சேரன்மாதேவியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சேரன்மகாதேவியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய வழக்கறிஞர் ராஜா ராம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News March 3, 2026

நெல்லை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது – மாரிசெல்வராஜ்

image

நாங்குநேரியில் நேற்று இரவு சாமானிய மக்கள் மீது சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும், சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

BIG BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; 7 பேர் கைது..!

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடம்போடுவாழ்வு மற்றும் பெரும்பத்து பகுதிகளில் நேற்று இரவு போதை கும்பல் நடத்திய அரிவாள் வீச்சில் இருவர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!