News January 19, 2026

சங்கராபுரத்தில் வழுக்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் அருகெ உள்ள சவுந்தரவல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(67). விவசாயியான இவர், சம்பவத்தன்று தனது வீட்டைக் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, தரையில் வழுக்கி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 9, 2026

சின்னசேலம் அருகே துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே பல்லகச்சேரியைச் சேர்ந்தவர் வினைதீர்த்தான்(4!). விவசாயியான இவர், நேற்று(ஏப்.8) அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆலைக்கு புறப்பட்டார். சின்னசேலம் அருகே கனியாமூர் ஏரிப் பகுதியில் சாலையின் குறுக்கே மின் கம்பி லாரியில் உரசுவதை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 9, 2026

உளுந்தூர்பேட்டை; எம்ஜிஆர் வேடத்தில் பிரச்சாரம்!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இரா.குமரகுருவிற்கு இரட்டை இலை சின்னத்தில் ஒருவர் எம்ஜிஆர் வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், காம்பட்டு கிராம மக்கள் எம்ஜிஆர் வேடமடைந்த நபரை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

News April 9, 2026

சின்னசேலம் அருகே சோகம் – தொழிலாளி பலி!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் வினைதீர்த்தான் (41). இவர் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வயலில் இருந்த கரும்பை வெட்டி லாரியில் ஏற்றி சென்ற போது லாரியில் மின் கம்பி பட்டு லாரியிலிருந்த வினைதீர்த்தான் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!