News February 5, 2026
சங்கராபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர்!

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து சங்கராபுரம் மகளிர் ஊர் நல அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, இதுகுறித்த விசாரணையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News February 6, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகரத் திருட்டு!

ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(28). சம்பவத்தன்று தனது பைக்கை சேலம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 6, 2026
உளுந்தூர்பேட்டை: கேஸ் சிலிண்டர் அடியில் இருந்த பாம்பு!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). கூலித் தொழிலாளியான இவரது வீட்டு சமையல் அறை, கேஸ் சிலிண்டர் அடியே 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
News February 6, 2026
கள்ளக்குறிச்சி; திருமண நாளில் பெண் தற்கொலை!

புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(27). இவருக்கும், மகேஸ்வரி(23) என்பவருக்கும் கடந்த ஆண்டு பி.3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கணவன் – மனைவி தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தில் மகேஸ்வரியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் மகேஸ்வரி அவதிப்பட்டு வந்தார். இதில், மனமுடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


