News April 1, 2025
சங்கரன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சங்கர நாராயணசாமி மற்றும் கோமதி அம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. இவ்விழா 48 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 3, 2025
தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2025
தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு முன்வந்து கொடி கம்பங்களை அகற்றும் எனவும், அதற்கான தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News April 2, 2025
பால் உற்பத்தியை அதிகரிக்க தென்காசியில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நமது மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.