News March 13, 2025
சங்கரன்கோவில்: விபத்தில் வட்டாட்சியர் & மகள் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த சிவகிரி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News September 12, 2025
தென்காசி பைக் விபத்தில் தொழிலாளி பலி

சுரண்டை அருகே கடையாலுருட்டி- சேர்ந்தமரம் இடையே பைக் விபத்தில் திருமலாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (49) உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேர்ந்தமரம் போலீசார், தலையில் பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை.
News September 12, 2025
தென்காசி: 50% மானியத்தில் கிரைண்டர்!

தென்காசி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.
News September 12, 2025
தென்காசி: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி, சுரண்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெனிக்ஸ் குமார் மற்றும் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யாபுரம் பகுதியில் செந்தில் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருமலைகுமார் என்ற பெரிய கட்டை என இரண்டு நபர்களை தென்காசி எஸ்.பி உத்தரவின் பேரில் ஆட்சியர் கமல் கிஷோர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.