News March 31, 2025

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

image

தென்காசி , சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவர், தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்தாராம். அப் பெண் வாங்கிய பணத்தைச் கட்டாததால், அந்த பணத்தை மெஹ்ராஜ் செலுத்தி வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீஸாா் விசாரிகின்றனர்.

Similar News

News January 28, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (28-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News January 28, 2026

தென்காசியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

image

இது நம்ம ஆட்டம் தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31 அன்று கேரம், எறிபந்து ஆகிய போட்டிகள் மற்றும் பிப்.1 அன்று மாவட்ட விளையாட்டு வளாகம் மேலபாட்டக்குறிச்சியில் மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04633-212580 (அ) 7806981962 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் தகவலை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

தென்காசி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்

image

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!