News September 6, 2025

சங்கரன்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் சேவியர் என்ற மாற்றுத்திறனாளிக்கு சொந்தமான கொட்டகையில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்ப்பு வந்தார். இந்நிலையில் அவர் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பலி. கடந்த வாரம் இவரது கொட்டகையில் நாய்கள் கடித்ததில் 9 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தது, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 6, 2025

தென்காசி மக்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவிப்பு

image

தென்காசி நகராட்சி உட்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் ஒரு பணியில் மிகப்பெரிய அளவில் முறையீடுகள் நடந்துள்ளன. எனவே உபயதாரர்கள் தாங்கள் வழங்கிய நன்கொடைகள், பணம், மற்றும் பொருட்கள் குறித்த விபரங்களை 9585090030 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு ஆலய சொத்து மீட்பு குழு சார்பில் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News September 6, 2025

தென்காசியில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

image

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (செப். 7) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு 7397724825, 7397724853 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க. வேலைதேடும் நபர்களுக்கு உதவும்.

News September 6, 2025

தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!