News March 11, 2025
சங்கரநாராயண சுவாமி கோயிலில் வேலை – அறிவிப்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் கோமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் தட்டச்சர், உதவி பரிசாரகர், உதவி யானைப்பாகன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் இன்று(மார்ச் 11) முதல் ஏப்.4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.
Similar News
News September 11, 2025
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கோட்டையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை Iபணியாளர்கள் ஆகஸ்ட் மாதம் ஊதியம் இன்று வரை வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு கண்டன போராட்டம் இன்று நடந்தது.
ஏஐசிசிடியூ தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர் சங்க மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, முருகேஸ்வரி, பகவத், ராஜ ஜோதி, குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News September 11, 2025
தென்காசியில் (செப்.19) தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.19 காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஷேர்*
News September 11, 2025
தென்காசி: தெருநாய்கள் கடித்ததில் 3 பேர் படுகாயம்

கடையநல்லூரில் தெரு நாய்கள் தாக்கியதில் மூவர் படுகாயம் அடைந்தனர். முதுசாமி (75), முருகன் (47) ஆகியோரை நாய்கள் கடித்து குதறின. இதனால் பைரோஸ் பேகம் (60) என்ற பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பைரோஸ் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.