News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 29, 2025

கோவையில் தரிசிக்க வேண்டிய அம்மன் கோயில்கள்!

image

கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோயில் – மேட்டுப்பாளையம். பொன்னூத்தம்மன் கோயில் – தடாகம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்காநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். ராமலிங்க செளவுடேஸ்வரி அம்மன் கோவில் – குமாரபாளையம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News March 29, 2025

பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

image

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.

News March 29, 2025

25 ரவுடிகள் மாநகரை விட்டு வெளியேற உத்தரவு: கமிஷனர்

image

கோவை மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை வெளியேற்ற 25 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் 2 தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியேற்ற உத்தரவு. 

error: Content is protected !!