News March 26, 2025
கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை!

கோவை மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
News September 16, 2025
கோவை செங்குளத்தில் மூழ்கி பலி

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 16, 2025
கோவை: போதையால் நேர்ந்த விபரீதம்!

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ்(26). பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எரிமேடு தண்டு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவர் அங்கு நிலைதடுமாறி அங்கிருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.