News September 15, 2025
கோவை: விழாவில் பங்கேற்க அழைப்பு

பெற்றோர்களை இழந்து உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு, ரூ.2000/- 18 வயது வரையிலான பள்ளி படிப்பை இடைநிற்றல் இன்றி தொடர உதவும், அன்பு கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) சென்னையில் துவக்கி வைக்கிறார். அதன் ஒருபகுதியாக கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில், கலெக்டர் பவன் குமார், எம்பி கணபதி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
கோவை: ரயில்வே துறையில் வேலை!

கோவை மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
விடைபெற்றது கோவை போலீஸின் ‘சாரா’

கோவை காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் சாரா உயிரிழந்தது. 2016ல் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த சாரா பணியில் இணைந்து, டிராக்கர் பணியில் 103க்கும் மேற்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் சேவையாற்றியது. 2024ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. போலீசார் மரியாதை செலுத்தி, போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
News September 15, 2025
கோவை அருகே ஆண் குழந்தை நரபலியா?

கோவை:இருகூர் – ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் மற்றும் அந்த இடத்தில் மிளகாய் பொடி,கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘குழந்தையை கொலை செய்து, அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம்.நரபலியாகவும் இருக்கலாம் என விசாரணை நடக்கிறது’ என்றனர்.