News May 24, 2024
கோவை: மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு!

கோவை, சின்னவேடம்பட்டி அருகே பூங்காவில் நேற்று(மே 23) மாலை சருக்கு விளையாட்டு கம்பியில் விளையாடிய சிறுவர்கள் 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு குழந்தைக்கு 8 வயதும், ஒரு குழந்தைக்கு 4 வயதும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
Similar News
News August 21, 2025
கோவையில் தொழுநோய் உஷார் மக்களே!

கோயம்புத்தூரில் புதிதாக 12 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. இந்த நோய் தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் நோய் பரவுதல் மற்றும் உடல் ஊனம் ஏற்படுவதை தடுக்க முடியும்.இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
News August 20, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.20) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News August 20, 2025
கோவை மாநகர காவல் துறை முதலிடம்!

கோவை மாநகரில் ‘பீட்’களின் எண்ணிக்கையை அதிகரித்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், அவசர அழைப்பு தகவலை பெற்ற 11.35 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது திருப்பூரில் 13 நிமிடங்கள், சென்னையில் 17 நிமிடங்கள், சேலத்தில் 21 நிமிடங்கள், நாமக்கல்லில் 24 நிமிடங்கள் என உள்ள நிலையில், கோவை தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.