News April 1, 2025

கோவை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிக்க 94981-81212, 7708-100100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 2, 2025

வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். மே.15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2025

கோவை: பொன்னூத்தம்மன் கோயில்!

image

கோவை, பன்னிமடை அருகே உள்ள வாரப்பாளையத்தில் புகழ்பெற்ற பொன்னூத்தம்மன் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் பொன்னூத்தம்மனை வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், பிரச்சனைகள் நீங்குமாம். இங்குள்ள பூவரச மரத்தில் குழந்தை தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகிறதாம். உங்கள் குடும்பத்தில் திருமணத்திற்கு காத்திருப்பவர்கள், குழந்தைபெற நினைப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க.

News April 2, 2025

JOB: கோவையில் வேலை

image

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் ஏப்.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.58,000 வழக்கப்படும். மேலும், விவரங்களுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்.<<>> இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!