News October 23, 2025

கோவை: மாநகராட்சி சார்பில் புகார் எண் அறிவிப்பு

image

கோவையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மழையால் சேதமடைந்த ரோடுகள், ‘வெட்மிக்ஸ்’ கொண்டு சீரமைக்கப்படுகின்றன. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், மழை தொடர்பான புகார் அளிக்க, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை, 0422 2302323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 23, 2025

நான் கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி!

image

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஒன்றிணைய 10 நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பவே, “நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, 10 நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர்” என்று தெரிவித்தார்.

News October 23, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.23) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News October 23, 2025

இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பு!

image

பொள்ளாச்சி அருகே உள்ள மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் விஷத்தன்மை வாய்ந்த நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனே, பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பாம்பு லாபகரமாகப் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!