News March 20, 2024
கோவை: மது பழக்கத்தால் தற்கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்தவர் ரங்கநாதன்(63). குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து இந்த நிலையில் நேற்று (மார்ச்.19) வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
கோவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News February 12, 2026
கோவை அருகே பயங்கர விபத்து! ஒருவர் பலி

சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் பரத்ராஜ். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய நண்பர் ஆதித்யா, தோழி சங்கீதா ஆகியோர் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பரத்ராஜ் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.


