News December 29, 2025
கோவை: மதுவுக்கு அடிமையானவர் திடீரென உயிரிழந்தார்

கோயம்புத்தூர் மாவட்ட வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (45). இவர் மதுவுக்கு அடிமையானதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்று விட்டார். இந்நிலையில் இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
Similar News
News December 31, 2025
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கிளை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காந்திபுரத்தில் இருந்து 20, சிங்காநல்லூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 60, நீலகிரிக்கு 20 என 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் புத்தாண்டு முடிந்து மீண்டும் ஊர் திரும்ப 160 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
News December 31, 2025
கோவையில் மொத்தமாக மாற்றம்

தமிழக காவல்துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மேற்கு மண்டலம் ஐஜியாக இருந்த செந்தில்குமார், பதவி உயர்வு பெற்று டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த சரவணசுந்தரம், மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News December 31, 2025
கோவை: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


