News November 11, 2025
கோவை மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமி (20), காளீஸ்வரன் (21), மற்றும் அஜித்குமார் (27) என்பவர்களே கைது செய்த அவர்களிடமிருந்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 11, 2025
குண்டு வெடிப்பு: கோவையில் அலர்ட்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
பொள்ளாச்சி அருகே விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சியைச் சேர்ந்த சதாசிவம், சூளேஸ்வரம்பட்டியைச் சேர்ந்த பரத் ஆகிய 2 பேர் ஒரே பைக்கில் வடக்கிப்பாளையத்தில் இருந்து புரவிபாளையம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


