News August 28, 2025

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கோவை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் அடிக்கடி குழாய் உடைப்பு மற்றும் வால்வுகளில் பழுது ஏற்படுகிறது. இது குறித்த புகார்களுக்கு, 89258 52927, 89258 52928 எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 28, 2025

கோவைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை வானிலை மையம்

image

கோவை மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

கோவை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

கோவை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

ஓணம் பண்டிகைக்காக சென்னை-கண்ணூா் சிறப்பு ரயில்!

image

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆக.28) இரவு புறப்படும் சென்னை – கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் மறுநாள் பிற்பகல் கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் திருவள்ளூர் காட்பாடி திருப்பூர் போத்தனூர் பாலக்காடு வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!