News December 8, 2024

கோவை: பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பேர் கைது!

image

கோவை, சாய்பாபா காலனி பகுதியில், விபச்சாரம் நடைபெறுவதாக  காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, கோவை சேர்ந்த உமாராணி (55) மற்றும் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சித்ரா (45) என்பவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

BREAKING: சூலூர் அருகே சுட்டுப் பிடித்த போலீசார்

image

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி பாலமுருகன், பிடிபடும் போது உதவி ஆய்வாளர் யுவராஜைக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்ட ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தற்காப்பிற்காக ரவுடியைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 5, 2026

கோவை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>க்ளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!