News April 25, 2024
கோவை: பாதிக்கப்பட்டவரை மிரட்டியவர்கள் கைது

பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல கூறி மூவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் மேற்கண்ட மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 19, 2025
கோவை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கோவை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<
News November 19, 2025
இன்ஸ்டாகிராம் மோகத்தால் கோவையில் சோகம்!

கோவை சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கார் ஷோரூம் டிரைவர். இவரது மனைவி சங்கீதா (26). 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சங்கீதா சினிமா பாடல்கள், வசனம், காமெடிகளை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனை கணவர் தினேஷ் குமார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 19, 2025
கோவைக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு!

கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. ரூ.10 ஆயிரத்து 740 கோடி செலவில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போதிய மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.


