News October 2, 2025
கோவை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 2, 2025
கோவை: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

1.அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2. இதற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3. ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
4. இங்கே <
News October 2, 2025
கோவை காவல்துறை எச்சரிக்கை!

கோவை எஸ்பி கார்த்திகேயன் விடுத்த செய்திக்குறிப்பில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க 94981 -81212, whatsapp எண் 7708-100 100 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 2, 2025
கோவை அருகே மூதாட்டி கொலை: ஒருவர் கைது

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் திருவள்ளுவர் சிலை பக்கம் குப்பை மேட்டில் மூதாட்டி பட்டீஸ்வரி (65), தலையில் காயத்துடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். குப்பை சேகரிப்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக, கேரளத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ், கல்லால் அடித்து கொன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. பின் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.