News May 26, 2024
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவான நபர் சிக்கினார்

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அபுதாஹீர் . இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். வெளியில் வந்த பின் பண மோசடி, வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு கோவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அபுதாஹீருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
கோவை: உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

கோவை மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!
News March 6, 2026
கோவை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<


