News April 20, 2025
கோவை: கடைக்கு சீல் வைத்ததால் தற்கொலை

கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெட்டிக்கடைக்கு போலீஸார் நேற்று சீல் வைத்தனர். இந்த நிலையில், நேற்று மன உளைச்சல் அடைந்த கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
கோவை: திருமண தடையை நீக்கும் அதிசய தலம்!

கோவை, அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். SHARE பண்ணுங்க!
News August 9, 2025
கோவையில் உதவியாளர் வேலை: ரூ.76,000 சம்பளம்!

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 51 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 9, 2025
கோவை மாவட்டத்தில் ஆக.11 ல் குடற்புழு நீக்க முகாம்

கோவை மாவட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் வரும் ஆக.11 ல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 9,55,919 பேருக்கும், 20 முதல் 30 வயது உள்ள 2,66,963 பெண்கள் என மொத்தம்12,22,882 பயனாளிகள் பயனடையவுள்ளனா். விடுபட்டவா்களுக்கு ஆக.18 அன்று வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.