News April 13, 2025
கோவை: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சில இளைஞர்கள், சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.1.09 கோடி ரொக்கம், 2 கார்கள், 2 பைக்குகள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 5, 2025
கோவை மக்களுக்கு முக்கிய எண்கள்

அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. (இந்த முக்கிய எண்களை SHARE பண்ணுங்க)
News November 5, 2025
கோவை: கடன் தொல்லை நீங்க! இத பண்ணுங்க

கோவை மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனிதமான நாளாகும். இந்நாளில் கோவை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 5, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TN-TET) இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நவம்பர் 5 முதல் தொடங்குகிறது. இத்தேர்வில் பங்கேற்போர் https://forms.gle/d2MbqVVtgGeKY9ra6 என்ற இணைப்பில் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


