News March 22, 2025
கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 22, 2025
கோவை வரும் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 25ஆம் தேதி கோவை வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிப்பு செய்கிறார். இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
News March 22, 2025
கோவை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்

கோவை மாநகராட்சியின் 25-26 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி வியாழன் காலை 10:30க்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விக்டோரியா காலில் மாமன்ற நிதி குழு தலைவர் மு.பா.சீரா பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மறுநாள் நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
News March 22, 2025
பள்ளி ஆசிரியை தற்கொலையில் திடுக் தகவல்

கோவை மதுக்கரை அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா(53). சில தினங்களுக்கு முன் இவர் அப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மகளுக்கு திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்ற வற்றால் மன அழுத்தத்தில் இருந்த பத்மா, மேற்கண்ட விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.