News August 6, 2025
கோவை எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை தொடர்பான 55 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறு விசாரணை 1 மனு (FIR), 45 மனுக்கு சுமூகமான முறையிலும் 09 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்து தீர்வு காணப்பட்டது.
Similar News
News August 22, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News August 22, 2025
3 பேர் மீது குண்டர் சட்டம்: மத்திய சிறையில் அடைப்பு

கோவை நஞ்சுண்டாபுரம் கண்ணனை மிரட்டி பணம், செல்போன் பறித்த ஷாருக்கான் (22), கஞ்சா விற்ற ஈஸ்வரன் சையத் அலி (34), 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனி சொக்கலிங்கம் (42) ஆகிய 3 பேரையும் போத்தனூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News August 22, 2025
3 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை.!

கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் பரிசோதனை முகாமில் 3,20,527 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதில் 1,950 பேருக்கு புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டு, 47 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை நடைபெற்றது. குணமடையாத வாய்ப்புண், மார்பகத்தில் வலியற்ற கட்டி, போன்றவை தெரிய வந்தன.