News March 28, 2025

கோவை எஸ்.பி அறிவுறுத்தல்!

image

கோவை எஸ்.பி. கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், இணையதளத்தில் பணத்தை இழந்துவிட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் புகார்களுக்கு ஆன்லைன் மூலமாக www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார். SHARE IT!

Similar News

News March 31, 2025

BREAKING: பொள்ளாச்சியில் தம்பதி தற்கொலை

image

கோவை வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி, வினோபா தம்பதி. இவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மாக்கினம்பட்டியில் மைத்துனர் நடத்திய ஹோட்டலை கார்த்தி தனது மனைவியுடன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.

News March 31, 2025

கோவை – அபுதாபி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

அபுதாபியிலிருந்து கோவைக்கு, விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அபுதாபி – கோவை – அபுதாபி விமான சேவை நேற்று முதல் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரத்துக்கு, 3 விமானங்களிலிருந்து, 4 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் முழு பகல்நேர விமானமாக இது மாறுகிறது.

News March 31, 2025

மருதமலைக்கு வாகனங்களில் செல்ல தடை

image

கோவை மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 4ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, ஏப்.1 மாலை 5 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். எனவே வரும் (ஏப்.4-6) வரை மலை மீது வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!